கர்நாடக இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு தொடங்கியது

 

கர்நாடக இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு தொடங்கியது

பெங்களூரு: கர்நாடக மாநில 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

கர்நாடகத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளனர். இந்த 5 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸூம், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.பாஜக சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மண்டியா உள்பட 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.