கர்நாடகா ராணுவ வீரர் கொலையில் புதிய திருப்பம்… மனைவியே கள்ளகாதலுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

கர்நாடகா ராணுவ வீரர் கொலையில் புதிய திருப்பம்… மனைவியே கள்ளகாதலுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

ஒரு மாதத்திற்கு முன்பு கோகக் கோஷிணாமலாகி அருவிக்கு சுற்றுலா சென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திரும்பி வரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது தெரிய வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

 

ஒரு மாதத்திற்கு முன்பு கோகக் கோஷிணாமலாகி அருவிக்கு சுற்றுலா சென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திரும்பி வரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது தெரிய வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தீபக் பட்டனாதரா (32) என்ற ராணுவ வீரர் கோகக் கோஷிணாமலாகி அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதையடுத்து, தீபக்கின் மனைவி அஞ்சலி ஜனவரி 28-ம் தேதி சுற்றுலா சென்ற கணவர் திரும்பி வரவில்லை என்று பிப்ரவரி 4-ம்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் புதிய திருப்பமாக தீபக்கின் சகோதரரும்  தீபக் காணாமல் போனதிற்கு அஞ்சலி தான் காரணம் என அதே காவல் நிலயத்தில் புகாரளித்தார்.

போலீஸ் விசாரணையில் அஞ்சலி தனது டிரைவர் பிரசாந்த் பட்டிலுடன் சேர்ந்து தீபக்கை கொலை செய்ய  திட்டமிட்டுள்ளனர். அதன்படி பிரசாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீபக்கை கொலை செய்து விட்டு பின்னர் மலையிலிருந்து தூக்கியெறிய முயற்சி செய்துள்ளனர்.

இதையடுத்து தீபக்கின் மனைவி அஞ்சலியும், டிரைவர் பிரஷாந்தும் கைது செய்யப்பட்டனர். தீபக்கின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.