கர்நாடகாவுக்கும் கல்தா கொடுத்த மோடி!  கானல் நீராய் போன காவிரி.. குளிர்காயும் மத்திய அரசு!

 

கர்நாடகாவுக்கும் கல்தா கொடுத்த மோடி!  கானல் நீராய் போன காவிரி.. குளிர்காயும் மத்திய அரசு!

தமிழகம் மற்றும் கர்நாடாக இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரிக்கை மனுவைக் கொடுத்தார் வைகோ.

கர்நாடகாவுக்கும் கல்தா கொடுத்த மோடி!  கானல் நீராய் போன காவிரி.. குளிர்காயும் மத்திய அரசு!

தமிழகம் மற்றும் கர்நாடாக இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரிக்கை மனுவைக் கொடுத்தார் வைகோ.

இந்நிலையில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மேகேதாட்டுவில் அணைகட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை வைத்திருந்தார். வருடக்கணக்கில் இரு மாநிலங்களுக்கும் காவிரி நீர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பையும் நடைமுறைப்படுத்தச் சொல்லி கர்நாடகாவை வலியுறுத்தாத மத்திய அரசு, நேற்று இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசு இருமுறை வலியுறுத்தியுள்ளதையும் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையே இணக்கம் ஏற்பட்டால் மட்டுமே மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்க முடியும் என்றும் தெரிவித்து விட்டது. கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மறுத்துள்ளது, தமிழகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.