கர்நாடகாவில் திறக்கப்பட்ட மதுக்கடை… நீண்ட வரிசையில் மதுவாங்க காத்திருக்கும் குடிமகள்கள்

 

கர்நாடகாவில் திறக்கப்பட்ட மதுக்கடை… நீண்ட வரிசையில் மதுவாங்க காத்திருக்கும் குடிமகள்கள்

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். அதன்பின் மே..3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மே.17 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயியுள்ளனர். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

wine shop

கர்நாடகாவில் 598 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் குடிமக்கள் கூட்டம் அலைமோதியது. மதுக் கடைகளில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதிகள் உள்ள போதிலும் ஒரு கி.மீ, தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் 40 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட மதுபான கடையில் கூட்டம் அலைமோதியதால் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள கக்கடாஸ்புராவில் ஒரு மதுபான கடை முன்பு ஆண்களுக்கு நிகராக பெண்களும் வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர்.