கரூரில் தம்பிதுரை அட்டூழியம்; பிரச்சார வேன் மீது தாக்குதல், முடக்கப்படுகிறார் ஜோதிமணி?!

 

கரூரில் தம்பிதுரை அட்டூழியம்; பிரச்சார வேன் மீது தாக்குதல், முடக்கப்படுகிறார் ஜோதிமணி?!

ஜோதிமணி பிரச்சாரம் செய்ய தடை, ஆனால் அவர் மாலை 6 மணிவரை பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி பெற்றிருக்கிறார். கரூர் நகரில் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருர்: காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணியை, அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரச்சாரம் செய்யவிடாமல் தொடர்ந்து முடக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆரம்பம் முதலே தேர்தல் கமிஷன், மாவட்ட நிர்வாகம், போலீஸ் குடைச்சல் கொடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலையிட்டு ஓரளவுக்கு சமாளித்து நின்றாலும், இன்று மாவட்ட ஆட்சியர் துணையோடு போலீசை வைத்து குண்டர்களை களமிறக்கி ஜோதிமணியையும் அவருக்கு ஆதரவாக வருகிறவர்களையும் அச்சுறுத்தி வருகிறார்கள்!

zfsfzfb

சில தினங்களுக்கு முன்பு கூட ஜோதிமணி பிரச்சாரம் செய்யும்போது இரு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டியது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து ஜோதிமணி, தம்பிதுரையும், விஜய பாஸ்கருக்கும் வெளியூரில் இருந்து குண்டர்களை இறக்கி என்னை தொடர்ந்து பிரச்சாரம் செய்யவிடாமல் முடக்குகிறார்கள் என்று தெரிவிந்திருந்தார்.

dvv

அதேபோல் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத்தின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. ஜோதிமணி பிரச்சாரம் செய்ய தடை, ஆனால் அவர் மாலை 6 மணிவரை பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி பெற்றிருக்கிறார். கரூர் நகரில் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தம்பிதுரை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். ஜோதி பிரச்சாரம் செய்யும் உரிமைக்காக போராட வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தற்போது திருச்சி சிவா, ஜோதிமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இதையும் வாசிங்க

சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..