கரு.நாகராஜன் பங்கேற்கும் விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்! – பாலபாரதி அதிரடி

 

கரு.நாகராஜன் பங்கேற்கும் விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்! – பாலபாரதி அதிரடி

கரூர் எம்.பி ஜோதி மணி பற்றி அவதூறாக பேசிய கரு.நாகராஜன் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளில் பெண்கள் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.எ பாலபாரதி தெரிவித்துள்ளார்.

கரூர் எம்.பி ஜோதி மணி பற்றி அவதூறாக பேசிய கரு.நாகராஜன் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளில் பெண்கள் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.எ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கரு.நாகராஜன், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதி மணியைப் பற்றி அவதூறாக பேசினார். இதைக் கண்டித்து அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க எம்.பி கலாநிதி, ஜோதி மணி ஆகியோர் வெளியேறினர். 

karu-nagarajan

கரு.நாகராஜன் பேசியதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்படித்தான் பேசுவோம் என்ற வகையில் பா.ஜ.க-வினர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி ஊடக நிறுவன உரிமையாளர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இனி கரு.நாகராஜன் கலந்துகொள்ளும் டி.வி விவாதங்களில் பெண்கள் சார்பாக யாரும் பங்கேற்க மாட்டோம் என்பதை ஊடக உரிமையாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.