கருப்பு கொடி காட்டுவதில் எந்த பயனும் இல்லை: சீமான்

 

கருப்பு கொடி காட்டுவதில் எந்த பயனும் இல்லை: சீமான்

ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதால் எந்த பயனும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை: ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதால் எந்த பயனும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அவரது வருகையின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் மோடியின் வருகையின் போது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதால் எந்த பயனும் இல்லை. வாக்கு இயந்திர முறையை தவிர்த்துவிட்டு வாக்கு சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும், கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றார்.