கருணாஸ் எம்எல்ஏ-வின் கார் ஓட்டுநர் தற்கொலை முயற்சி: காரணம் தெரியுமா?

 

கருணாஸ் எம்எல்ஏ-வின் கார் ஓட்டுநர் தற்கொலை முயற்சி: காரணம் தெரியுமா?

கருணாஸ் எம்.எல்.ஏவின் கார் ஓட்டுநர் உள்பட 3 பேர், மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாங்குநேரி : கருணாஸ் எம்.எல்.ஏவின் கார் ஓட்டுநர் உள்பட 3 பேர், மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் மஞ்சங்குளத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், கருணாஸின் கார் ஓட்டுநராக உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கருணாஸ் கைது செய்யப்பட்ட போது, நாங்குநேரி அருகே அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக கார்த்திக் உள்ளிட்டோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சோதனை என்ற பெயரில் இரவு நேரங்களில், போலீசார் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக், சுப்பையா, சாமிதுரை ஆகியோர் காவல்நிலையத்துக்கு சென்று கேட்டுள்ளனர்.அங்கு போலீசார் தாக்கியதால் மூவரும் மண்ணெண்ணெய் குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

karunas

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காவல்நிலையம் முன்பு 3 பேர் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.