கருணாஸை பிடிக்க தனிப்படை அமைப்பு

 

கருணாஸை பிடிக்க தனிப்படை அமைப்பு

காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசிய கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை: காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசிய கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்வரையும், தி.நகர் துணை கமிஷனர் அரவிந்த்தையும் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசினார். அவரது பேச்சு கடும் கண்டனங்களை எழுப்பியது. அதனையடுத்து அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.