கருணாநிதி வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் – மம்தா பானர்ஜி!  

 

கருணாநிதி வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் – மம்தா பானர்ஜி!  

கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “ஸ்டாலின் என்ற பெயரிலேயே புரட்சி இருக்கிறது. கருணாநிதி மறைந்தாலும் இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார். எந்த முடிவெடுத்தாலும் மாநில மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். தமிழ் மக்கள் எப்போதும் தைரியமானவர்கள். அடுத்தமுறை தமிழகம் வரும்போது நான் தமிழை கற்றுக்கொள்கிறேன். தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி. எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி. அவர்  வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்” என்று தெரிவித்தார்.