கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளும் ரத்து: சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

 

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளும் ரத்து: சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார்.

அவர் மறைந்ததையடுத்து, சென்னை மாநகராட்சி அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியிருந்தது. அந்த சான்றிதழை வைத்து, நிலுவையில் இருக்கும் அவர் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்திருந்தனர்.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், கடந்த 2011 முதல் 2015 வரை அவர் மீது தொடரப்பட்டிருந்த 13 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.