கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வருகை! 

 

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வருகை! 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வருகை! 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையானது அவரது நினைவு தினமாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாளை திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார். இந்த விழாவிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். நாளை மாலை 5 மணிக்கு இந்த சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

இதில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முரசொலி செல்வம் வரவேற்கிறார். சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு மாலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.