கருணாநிதியாக மாறிய எடப்பாடி… வெளிநாட்டில் சாதித்ததற்காக மு.க.ஸ்டாலின் பாராட்டு விழா..!

 

கருணாநிதியாக மாறிய எடப்பாடி… வெளிநாட்டில் சாதித்ததற்காக மு.க.ஸ்டாலின் பாராட்டு விழா..!

ஜெயலலிதா போல இருப்பார் என நினைத்தால் கருணாநிதி போல மாறி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா போல இருப்பார் என நினைத்தால் கருணாநிதி போல மாறி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா இருந்த போது வெளிநாட்டு முதலீட்டார்களை தமிழகத்திற்கு வரவழைத்து முதலீட்டுகளை திரட்டினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கோட்டு சூட்டுக்களை மாட்டிக் கொண்டு நாடு நாடாக சுற்றக் கிளம்பி விட்டார். stalin

படிப்படியாக அடிமையாக இருந்த தன்னை ஆளுமையாக காட்டிக் கொள்ள முயன்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி.  தொழில் முதலீடுகள ஈர்க்க அவர் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்க்கு பயணம் போயிருக்கிறார். இதில்  பல திட்டங்களை அவர், தமிழகத்துக்கு கொண்டு வர திட்டம் போட்டிருக்கிறார். 

 ஆனால், அவருடைய பயணத்தை, எதிர்க்கட்சி தலைவர்கள், விமர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு  பதிலடி கொடுக்க முதல்வர் எடப்பாடியார் சென்னை திரும்பியதும் பயண வெற்றியை கொண்டாடும் வகையில் அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டம் போட்டு இருக்கிறார்கள். இப்போது தமிழ்நாடு இருக்கிற நிலைமையில், இதெல்லாம் தேவையா? எனத் தலையில் அடித்துக் கொள்கிறார்கள் அதிமுக உள்விவகாரம் அறிந்தவர்கள். edappadi

ஆனால், சொன்னபடி வெளிநாட்டு முதளீடுகளை திரட்டி வந்தால் தானே திமுக சார்பில் எடப்பாடியாருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்வேன் என கிண்டலடித்திருக்கிறார் எதிரிக் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின். 

ஆக மொத்தத்தில் வெளி நாட்டில் இருந்து திரும்பும் எடப்பாடிக்கு கச்சேரி உறுதி…!