கராச்சியில் நச்சு வாயு கசிவால் 14 பேர் பலி – பாகிஸ்தானில் சோக சம்பவம்

 

கராச்சியில் நச்சு வாயு கசிவால் 14 பேர் பலி – பாகிஸ்தானில் சோக சம்பவம்

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் நச்சு வாயு கசிந்து அதை சுவாசித்த 14 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் நச்சு வாயு கசிந்து அதை சுவாசித்த 14 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் மர்மமான நச்சு வாயு கசிந்ததில் அதை சுவாசித்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியின் கியாமாரி பகுதியில் வசிப்பவர்கள் கடந்த 16-ஆம் தேதி இரவு கடுமையான சுவாச பிரச்சனையுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்லத் தொடங்கினர். இந்த நிலையில், மர்மமான நச்சு வாயு கசிவின் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ttn

ஆனால் இந்த நச்சு வாயுவை சுவாசித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நச்சு வாயு தாக்கி சிலர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.