’கரகாட்டக்காரன் 2’…இந்தச் செய்தியை நம்புனாத்தான் இன்னைக்கு வீட்ல சோறு போடுவாங்களாம்…

 

’கரகாட்டக்காரன் 2’…இந்தச் செய்தியை நம்புனாத்தான் இன்னைக்கு வீட்ல சோறு போடுவாங்களாம்…

கரகாட்டக்காரன் படம் ரிலீஸாகி சரியாக 30 ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில் டாப்டென் காமெடி என்று எடுத்துக்கொண்டால் மற்றவர்கள் எல்லாம் அந்த வாழைப்பழக் காமெடிக்கு வணங்கி வழிவிட்டு நிற்கத்தான் வேண்டும். ‘சரி ஒரு கரகாட்டக்காரன் அங்க இருக்கு. இன்னொன்னு? அதானே இது என்று முரண்டு பிடிக்காமல் கரகாட்டக்காரன் பார்ட் 2வை எடுக்கும் முடீல் இருக்கிறாராம் இயக்குநர் கங்கை அமரன்.

கரகாட்டக்காரன் படம் ரிலீஸாகி சரியாக 30 ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில் டாப்டென் காமெடி என்று எடுத்துக்கொண்டால் மற்றவர்கள் எல்லாம் அந்த வாழைப்பழக் காமெடிக்கு வணங்கி வழிவிட்டு நிற்கத்தான் வேண்டும். ‘சரி ஒரு கரகாட்டக்காரன் அங்க இருக்கு. இன்னொன்னு? அதானே இது என்று முரண்டு பிடிக்காமல் கரகாட்டக்காரன் பார்ட் 2வை எடுக்கும் முடீல் இருக்கிறாராம் இயக்குநர் கங்கை அமரன்.

karakatakaran

’ஒருவாரம் ஓடாத படத்துக்கெல்லாம் பார்ட் 2 எடுக்குறப்ப நம்ம படம் ஒரு வருஷத்துக்கும் மேல ஓடுன படம்ணே’ என்று கங்கை அமரனை தூண்டிவிட்ட செந்தில் யாரென்று தெரியவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு ராமராஜனை சந்தித்து அதன் துவக்கப்புள்ளி குறித்துப் பேசிய கங்கை அமரன் படத்தின் நடித்த அத்தனை பேரையும் தனது தொடர்பு எல்லைக்குள் கொண்டுவரும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறாராம்.

இது குறித்துப்பேசிய கங்கை அமரன்,”கதையை இப்ப உள்ள ட்ரெண்டுலதான் பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். ராமராஜன், கனகா ஜோடிக்கு குழந்தைகள் பிறந்து அவங்களோட இரண்டாவது தலமுறையில நடக்குறமாதிரி கதையை யோசிச்சிக்கிட்டிருக்கேன். ஆக படத்துல பழைய ஆட்களும் இருப்பாங்க. புதிய தலைமுறை நடிகர்களும் இருப்பாங்க. சீக்கிரமா முறையான அறிவிப்பை வெளியிடுவோம்’’என்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா,வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி கங்கை அமரன் ஆகிய அடுத்த தலைமுறை இணைந்து தயாரிக்கப்போகும் இப்படத்துக்கு இவர்களுக்கும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அதே இளையராஜாதான் இசையமைக்கப்போகிறாராம்.