கமல் சாருக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்சிக்கோங்க: மும்தாஜை அழவைத்த சினேகன்!

 

கமல் சாருக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்சிக்கோங்க: மும்தாஜை அழவைத்த சினேகன்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் சாருக்கு உரிய மரியாதை தருவதில்லை எனும் தனது ஆதங்கத்தை கவிஞர் சினேகன் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, சுஜா, வையாபுரி, ஆர்த்தி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை கூறவும், பிக் பாஸ் வீட்டிற்குள் கலகத்தை ஏற்படுத்தவும் முதல் சீசன் போட்டியாளர்கள் உள்ளே வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், முதல் சீசன் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக மும்தாஜை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

மும்தாஜின் உடல்நலம் கருதி அவருக்கு வழங்கப்படும் எருமைப்பாலை கட் செய்தது, பிக் பாஸ் அன்பு காட்டுற விளையாட்டல்ல, இது புத்தியை பயன்படுத்த வேண்டிய விளையாட்டு என மும்தாஜையே கார்னர் செய்து சினேகன் டீம் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி குறித்த புரொமோவில், பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தான் உள்ளே வந்திருக்கிறீர்கள். ஆனால் இங்கு நிறைய முரண்பாடுகள் உள்ளதாக சினேகன் கூறுகிறார்.

கவிஞர் சினேகன்

மேலும், கமல்ஹாசனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவது குறித்து பேசிய சினேகன், கமல் சாருக்குன்னு தனி மரியாதை இருக்கு. அவர் வரும்போது இங்கு சிலர் கால் மேல் கால் போட்டு அமர்வது தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை. உங்கள இங்க திட்டி முடிச்சிட்டு இந்த திரை மூடிய பிறகு உங்களுக்காக ஃபீல் பண்ணி, தப்பு பண்ணின உங்களுக்காக மக்களிடம் எக்ஸ்கியூஸ் பண்ணி பேசுவாருன்னு தெரியுமா? என கேட்டவுடன் மும்தாஜின் கண்ணில் இருந்து நீர் தாரைதாரையாக கொட்டியது.

இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனை முன் வைத்து பெரிசா ஏதோ ஒரு பிரச்னைக்கு பிக் பாஸ் ப்ளான் பண்ணிவிட்டது போல் தெரிகிறது.