கமல்ஹாசன் இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவார்: நடிகை கஸ்தூரி கணிப்பு

 

கமல்ஹாசன் இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவார்: நடிகை கஸ்தூரி கணிப்பு

கமல் ஹாஸன் 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

சென்னை: கமல் ஹாஸன் 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் ’நாதுராம் கோட்சே’ என்று தெரிவித்தார். கமலின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் பல்வேறு கட்சி தலைவர்கள், இந்து அமைப்புகள் அவர் மீது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே…பேசியே ஒரு   படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ Kamal பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க…. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? I think… 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க! என்று பதிவிட்டுள்ளார்.