கமல்ஹாசனின் மதிப்பை கெடுக்க சதி!ஞானவேல் ராஜா பணம் கொடுக்கவும் இல்லை, கமல் பணத்தை வாங்கவும் இல்லை – ராஜ்கமல் நிறுவனம்

 

கமல்ஹாசனின் மதிப்பை கெடுக்க சதி!ஞானவேல் ராஜா பணம் கொடுக்கவும் இல்லை, கமல் பணத்தை வாங்கவும் இல்லை – ராஜ்கமல் நிறுவனம்

திரு.ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் விளக்கம் அளித்துள்ளது. 

திரு.ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் விளக்கம் அளித்துள்ளது. 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கமல்ஹாசன் தன்னிடம் வாங்கிய 10 கோடி முன் பணத்தை இன்னும் கொடுக்க வில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து ஞானவேல்ராஜா அளித்திருக்கும் புகாரில், கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறினார்.

kamalhassan

படத்தில் நடிப்பதற்காக சம்பளத்தில் முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில், பணம் பெற்று நான்கு ஆண்டுகள் வரையில் ஆகிவிட்ட நிலையில், இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்ட்க்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒப்பந்தத்தின் படி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உத்தம வில்லன் திரைப்படத்தின் முதல் பதிவை, திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா (பி) லிமிட்டெட்டில் ஒப்படைத்துவிட்டது. ஞானவேல் ராஜாவுக்கும், கமல்ஹாசனுக்கும் தனிப்பட்ட வகையில் எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. எனவே, திரைப்படத்தை வெளியிடும் பொருட்டு, கமல்ஹாசனுக்கு ஞானவேல் ராஜா பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.

கமல்ஹாசனின் மதிப்பை கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன. கமல்ஹாசனின் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாராகி வருகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.