கமலை மிஞ்சும் நிர்மலா தேவியின் கெட்டப் சேஞ்ச்!

 

கமலை மிஞ்சும் நிர்மலா தேவியின் கெட்டப் சேஞ்ச்!

கடந்த வாரம் நிகழ்வுக்குப் பிறகு நெல்லையில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்மலா, இன்று வழக்கிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மொட்டை தலையோடு வந்திருந்தார்.

பேராசிரியர் முருகன் யார் என்றால் எத்தனை பேரால் உடனடியாக கூகுள் பண்ணாமல் அவரை பற்றி சொல்ல முடியும்? பேராசிரியர் நிர்மலா யார் என்றால், அடிஷனல் ஷீட் வாங்கி எல்லாராலும் கட்டுரை எழுதி குவிக்க முடியும் என்பது தெரிந்த விஷயம்தான். இரண்டு பேராசிரியர்களும் சேர்ந்து மாணவிகளுக்கு போதிக்க நினைத்த பாடத்திற்காக வழக்கை சந்தித்துவருபவர்கள்தான். நிர்மலா தேவிக்கு கிடைத்த எதிர்மறை வெளிச்சம், முருகன்மேல் வீசவில்லை என்பதுதான் சோகம். போகட்டும், விஷயத்துக்கு வருவோம்.
 

Nirmala Devi

கெட்டப் மாற்றுவதில் கமலை மிஞ்சிவிடுவார் போல பேராசிரியை நிர்மலா தேவி. முந்தின முறை வாய்தாவுக்கு சாமியாடி கோர்ட்டையே கலகலக்க வைத்தவர், இந்தமுறை சற்று வித்தியாசமாக அதாவது மொட்டை தலையோடு நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். கடந்த வாரம் நிகழ்வுக்குப் பிறகு நெல்லையில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்மலா, இன்று வழக்கிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மொட்டை தலையோடு வந்திருந்தார். மொட்டைத்தலையோடு வந்திருந்தார், சரி, அதுக்கும்மேல நியூஸ் என்ன என்றால், அவ்வளவுதான் நியூஸ். அதுதான் நியூஸ்.