கமலுக்கு மூளையில் கோளாறு: செல்லூர் ராஜு

 

கமலுக்கு மூளையில் கோளாறு: செல்லூர் ராஜு

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்

சென்னை: மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேற்று முன்தினம் மூன்றாவது முறையாக பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். புயலின் வேகம் அளவிற்கு, அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. அரசு செயல்பாடுகள் இல்லாமல் துருப்பிடித்து கிடக்கிறது என்றார்.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அரசு துருப்பிடித்த அரசல்ல, மக்களுக்கு சேவையாற்றும் கூர்மையான அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு என விமர்சித்துள்ளார்.