கமலின் வேண்டுகோளை ஏற்று,தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டுகோள் வைத்த அனிதாவின் அண்ணன்…

 

கமலின் வேண்டுகோளை ஏற்று,தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டுகோள் வைத்த அனிதாவின் அண்ணன்…

மேலும், யாருக்கு ஓட்டுப்போடக் கூடாது என நீட் கொடுமையால் உயிரிழந்த அனிதா அப்பா, அம்மாவிடம்  கேளுங்கள் என குறிப்பிட்டார். கமல் கேட்டது அனிதா அண்ணனின் காதில் விழும், அதற்கு அவர் இப்படி ஒரு பதில் சொல்வார் என கமல்ஹாசன் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரச்சார வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். புதிதாய் கட்சி துவங்கிய கமல்ஹாசன் முதன்முதலாக தேர்தலை சந்திக்க போகிறார். தன்னுடைய பிரச்சாரத்தை கூட சினிமா ஸ்டைலில் பண்ணும் கமல்ஹாசன், நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்டார். மேலும், யாருக்கு ஓட்டுப்போடக் கூடாது என நீட் கொடுமையால் உயிரிழந்த அனிதா அப்பா, அம்மாவிடம்  கேளுங்கள் என குறிப்பிட்டார். கமல் கேட்டது அனிதா அண்ணனின் காதில் விழும், அதற்கு அவர் இப்படி ஒரு பதில் சொல்வார் என கமல்ஹாசன் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

இதுகுறித்து அனிதாவின் அண்ணன் மணிரத்தினம், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் #கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்…நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன்,மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..

ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன். அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன். உடல்தானம் செய்துள்ளேன். புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்…

அண்ணன் #கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம். #பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது,என்பதில்…

அனிதா இறந்த போது,  “திருமாவளவன்” இதை சும்மா விடக்கூடாது என தாங்கள் கூறிய அதே #திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர். மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே..

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது,ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே, என்றும் #கமல்_ரசிகன் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதையும் வாசிக்க: பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி?