கமலின் கிராமத்தில் பன்றி காய்ச்சல்; சிறுமி பலி

 

கமலின் கிராமத்தில் பன்றி காய்ச்சல்; சிறுமி பலி

கமல்ஹாசன் தத்து எடுத்திருக்கும் அதிகத்தூரில் பன்றி காய்ச்சலால் அஷித்தா என்ற 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்: கமல்ஹாசன் தத்து எடுத்திருக்கும் அதிகத்தூரில் பன்றி காய்ச்சலால் அஷித்தா என்ற 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது அரசியல் செயல்பாடுகள் வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேர எழுப்பி வருகின்றன. இதற்கிடையே கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும்போது தமிழகம் முழுவதும் கிராமங்களை தத்தெடுக்கப்போவதாக அறிவித்தார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை கமல் தத்தெடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள முதல் கிராமம் இதுதான். நிலத்தடி நீர் சேமிப்பில் இந்த கிராமம் முன்னோடி கிராமமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கமல் தத்தெடுத்திருக்கும் அதிகத்தூர் கிராமத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக அஷித்தா என்ற 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த கிராமத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை தரப்படும் என கமல்ஹாசன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.