“கமர்கட்டு” கொடுத்து திமுக ஏமாற்றியது என முதல்வர் சொல்லுவார்- ஸ்டாலின்

 

“கமர்கட்டு” கொடுத்து திமுக ஏமாற்றியது என முதல்வர் சொல்லுவார்- ஸ்டாலின்

வேலூர் மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்திற்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒரே ஒரு தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. வேலூர் தொகுதி தேர்தலை பாஜக மற்றும் அதிமுக சதி செய்து திட்டமிட்டு நிறுத்தியது
. இது திமுகவிற்கு கிடைத்த முழுமையான வெற்றி. வேலூர் தொகுதியில் கமர்கட்டு கொடுத்து திமுக ஏமாற்றியது என முதல்வர் இனி கூறுவார். மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சியை முறியடித்து வேலூர் தொகுதி திமுகவின் கோட்டையாகி இருக்கிறது ” என விமர்சித்தார்.