கப்பலைக் காப்பாற்ற சென்ற கண்ணன்! ஆன்மிக கதைகள்!

 

கப்பலைக் காப்பாற்ற சென்ற கண்ணன்! ஆன்மிக கதைகள்!

எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு நேர்கின்றதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன். தீயோர்களைத் தண்டித்து, நல்லோர்களைக் காப்பேன் என்பது கீதையின் நாயகன் கண்ணனின் வாக்கு. 
எந்நேரமும் கண்ணனின் நினைவு. அதனால் எப்போதும் ஆட்டம், பாட்டம், பஜனைகள் என்று வாழ்ந்து வந்தவர் உத்தமர் அக்ராஜி. அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு, கண்ணனே நேரில் அவருக்கு அவ்வப்போது காட்சியளித்தும் வந்தார். 

எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு நேர்கின்றதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன். தீயோர்களைத் தண்டித்து, நல்லோர்களைக் காப்பேன் என்பது கீதையின் நாயகன் கண்ணனின் வாக்கு. 
எந்நேரமும் கண்ணனின் நினைவு. அதனால் எப்போதும் ஆட்டம், பாட்டம், பஜனைகள் என்று வாழ்ந்து வந்தவர் உத்தமர் அக்ராஜி. அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு, கண்ணனே நேரில் அவருக்கு அவ்வப்போது காட்சியளித்தும் வந்தார். 

kannan

அக்ராஜி என்பவர் நாபாஜி என்ற ஆதரவற்ற சிறுவனுக்கு அடைக்கலம் தந்தார். அவர் அக்ராஜியின் மடத்தில் நடக்கும் பஜனையில் பங்கேற்பார். மகான்களின் உபதேசங்களைக் கேட்பார். அவரும் சிறந்த பக்தராக விளங்கினார். ஒருநாள் அக்ராஜி பூஜை முடிந்து நிஷ்டையில் அமர்ந்தார். வழக்கமாக தரிசனம் தரும் கண்ணன், நீண்ட நேரமாகியும் வரவில்லை.
அக்ராஜியின் மனதில் கவலை. கண்ணா! என் பக்தியில் ஏதும் குறை வந்து விட்டதா? ஏதேனும் தவறு செய்து விட்டேனோ? எனக் கண் கலங்கினார். அருகில் இருந்த நாபாஜி நெருங்கி வந்து, குரு தேவா! உங்கள் பக்தியில் எந்தக் குறையும் இல்லை. ஒரு பெரும் வியாபாரியின் கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. அந்த வியாபாரி உங்கள் மீது பக்தி கொண்டவர். தன்னைக் காப்பாற்றினால், தன் பொருளில் கால் பங்கை, இந்த மடத்திற்கு அளிப்பதாக பகவானிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற கண்ணன் அங்கு போயிருக்கிறார். அதனால் தான் இன்று அவர் உங்களுக்குத் தரிசனம் தரவில்லை என்றார். 

kannan

சற்று நேரத்தில் பகவான் தரிசனம் தந்து விட்டு, நாபாஜி சொன்ன அதே விஷயத்தை தாமதத்திற்கான காரணமாகச் சொன்னார். அக்ராஜிக்கு வியப்பு மேலிட்டது. குருவான தன்னையும் மிஞ்சிய நாபாஜியை பாராட்டினார். நாபாஜியோ, உங்களுக்கு அடியேன் செய்த பணிவிடைகளாலும், தாங்கள் அளித்த ஆசியாலும் தான் கண்ணனின் அருள் எனக்கு கிடைத்தது என்று பணிவுடன் பதிலளித்தார். அக்ராஜியின் உத்தரவுப்படி நாபாஜி பாண்டு ரங்கனின் புகழ்பாடும் பக்த விஜயக் கதைகள் என்னும் நுõலை எழுதினார். அந்த நூல் உருவாகக் காரணமாக அமைந்தது துய்மையான பக்தி, கருணை, குருபக்தி, குருசேவை ஆகியவை தான். நமக்கும் இந்த அரிய குணங்கள் வேண்டுமென கண்ணனிடம் பிரார்த்திப்போம்.