கன மழையால் இடிந்து விழுந்த அரசுப் பள்ளிக் கட்டிடம்..!
Oct 23, 2019, 08:49 IST1571800746000
தமிழகத்தில் பருவ மழை துவங்கிய நாள் முதல், பல்வேறு மாவட்டங்களில் பரவாலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பருவ மழை துவங்கிய நாள் முதல், பல்வேறு மாவட்டங்களில் பரவாலாக மழை பெய்து வருகிறது. உதகையில் நிற்காமல் பெய்து வரும் கன மழையால் மண் சரிவு ஏற்பட்டு, அங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. உதகை பேருந்து நிலையங்களின் பின்புறமும் மண் சரிவால், பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை.
நீலகிரி மாவட்டம் முழுவதும், மழை பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பெய்து வரும் கன மழையால் உதகையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டிடம் மழையில் ஊறி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. மழைக் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் யாரும் உள்ளே இல்லை. அதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.