கன்னியாஸ்த்திரி வீசப்போகும் காகித வெடிகுண்டு! பதட்டத்தில் கேரளத் திருச்சபைகள்!

 

கன்னியாஸ்த்திரி வீசப்போகும் காகித வெடிகுண்டு! பதட்டத்தில் கேரளத் திருச்சபைகள்!

போப்பாண்டவர் வரை போய் முறையிட்டும் கைவிடப்பட்டதால் சிஸ்ட்டர் லூசி கலப்புறையில் தன் 35 ஆண்டுகால கன்னியாஸ்த்திரி மட வாழ்க்கையை புத்தகமாக எழுதி இருக்கிறார். அது பல பாஸ்பரஸ் பக்கங்களைக் கொண்டிருக்கிறது என்று கேரள கிறிஸ்த்தவர்களிடையே பெரும் பரபரப்புக் கிளம்பி இருக்கிறது.

போப்பாண்டவர் வரை போய் முறையிட்டும் கைவிடப்பட்டதால் சிஸ்ட்டர் லூசி கலப்புறையில் தன் 35 ஆண்டுகால கன்னியாஸ்த்திரி மட வாழ்க்கையை புத்தகமாக எழுதி இருக்கிறார். அது பல பாஸ்பரஸ் பக்கங்களைக் கொண்டிருக்கிறது என்று கேரள கிறிஸ்த்தவர்களிடையே பெரும் பரபரப்புக் கிளம்பி இருக்கிறது.

nun

கேரளமாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்த்திரி மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை  ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃபிராங்கோ முல்லைக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார்  அளித்தார்.ஆனால் , போலீசார் புகாரை பதிவு செய்ய காலம் தாழ்த்தி வந்தனர்.

இதையடுத்து கேரளத்தில் உள்ள பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கொச்சியில் கூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் சிஸ்ட்டர் லூசி கலபுறையில்.அதனால்,அவர் சார்ந்த ஃஎ.சி.சி.( Francis is can clarist congregation) என்கிற திருச்சபை கடும் நடவடிக்கைகள் எடுத்தது.அவரை கன்னியாஸ்த்திரி பொறுப்பில் இருந்து நீக்கியது.அவரை மடத்தை விட்டு வெளியேற்றியது. 

pop

இதையடுத்து சிஸ்ட்டர் லூசி வாட்டிகன் நகரில் இருக்கும் போப்பாண்டவருக்கு புகார் அனுப்பினார்.அங்கும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் கன்னியாஸ்த்திரி பதவியை விட்டு விலக்கப்பட்டு மீண்டும் லூசி கலப்புறையில் ஆகிவிட்ட அந்தப் பெண்மணி தனது அனுபவங்களை ‘ கர்த்தாவிண்டே நாமத்தில்’ ( கர்த்தரின் பெயரால்) என்கிற பெயரில் 36 அத்தியாயங்கள் கொண்ட 232 பக்க நூலாக எழுதி இருக்கிறார். 

விரைவில் வெளிவரப்போகும் அந்த நூலில் மடத்தில் நடந்து வரும் பல பகீர் பாலியல் குற்றங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்.வயதான கன்னியாஸ்த்திரிகள்,புதிதாய் வரும் இளம் பெண்களை தன்பால் உறவுக்கு பயன்படுத்துவது,மடத்துக்கு வரும் பாதிரிகளுக்கு இளம் பெண்களை அனுப்பி வைப்பது என்று பல தகவல்களை பகிர்ந்திருக்கிறாராம்.

பல பாதிரியார்கள்,பார்வையாளர்களாக மடத்துக்கு வந்து அங்கேயே கன்னியாஸ்திரிகளை பாலியல் உறவுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.ஒரு கன்னியாஸ்த்திரி கர்ப்பமாகி குழந்தையே பெற்றெடுத்தார். அதற்கு காரணமான பாதிரியை திருச்சபை காப்பாற்றி ,அந்த கன்னியாஸ்திரியை வெளியேற்றியது.

கண்ணூரை அடுத்த கொட்டியூரில் ராபின் என்கிற பாதிரியார் ஒரு சிறுமியை கற்பமாக்கியது எல்லோருக்கும் தெரியும்,அவருக்கு கேரளாவில் பல்வேறு மடங்களில் உள்ள கன்னியாஸ்த்திரிகளுடன் தொடர்பு இருக்கிறது. அதனால் தான்,அவர் மீது அந்த சிறுமி பாலியல் குற்றச்சாட்டு வைத்தபோது பல கன்னியாஸ்த்திரிகள் ராபினுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

வயதான பாதிரிகள் , இளம் நிர்வான கன்னியாஸ்த்திரிகளுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்ப்பது சாதாரணக் காட்சி.என்னையும் நான்குமுறை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார்கள்.என்று பக்கத்துக்கு பக்கம் பாம் வைத்திருக்கிறாராம் லூசி காலப்பகுதியில்!

அடுத்த வாரம் ‘ கர்தரின் நாமத்தினாலே’ நூலை வெளியிடப்போவதாக டி.சி புக்ஸ் பதிப்பகம் அறிவித்து இருக்கிறது. கேரளவே திக் திக் என்று காத்திருக்கிறது.