கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
Dec 3, 2019, 07:21 IST1575337871000
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக . பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது