கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! 

 

கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! 

கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். 

கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். 

அரபிக்கடலில் ‘மகா’ என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Rain

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியிலுள்ள உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுக்கா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர், மதுரை, கொடைக்கானல், தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.