கனமழை எதிரொலி: தூத்துக்குடி, சென்னை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை 

 

கனமழை எதிரொலி: தூத்துக்குடி, சென்னை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை 

கனமழை காரணமாக சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.மேலடுக்கு சுழற்சி காரணமாகத்  தமிழகத்தில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மழை

இந்நிலையில் கனமழை காரணமாக, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, ராமநாதபுரம் காஞ்சிப்புரம், திருவள்ளூர், புதுச்சேரி  மற்றும் கடலூரில் பள்ளுகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.