கனடாவில் இருமுறை நிலநடுக்கம்
Oct 22, 2018, 13:00 IST1540193440000
கனடா நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
ஒட்டாவா: கனடா நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
கனடா நாட்டின் வான்கோவர் பகுதியில் அந்நாட்டின் நேரப்படி காலை 6.39 மணிக்கு ஒரு முறையும், காலை 7.16 மணிக்கு மற்றொரு முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6-ஆக பதிவாகியுள்ளது.
இதனால் அங்கு மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் என்னென்ன சேதாரம் அடைந்துள்ளன என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.