கந்து வட்டிக்காரர்களை விட மோசமான நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர்! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

 

கந்து வட்டிக்காரர்களை விட மோசமான நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர்! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

இ.எம்.ஐ கட்ட மூன்று மாதம் அவகாசம் என்று கூறிவிட்டு கந்துவட்டியை விட மோசமாக நிதி வசூல் செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிவர்வ் வங்கி ஆளுநருக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இ.எம்.ஐ கட்ட மூன்று மாதம் அவகாசம் என்று கூறிவிட்டு கந்துவட்டியை விட மோசமாக நிதி வசூல் செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிவர்வ் வங்கி ஆளுநருக்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ தவணை கட்ட விலக்கு அளிக்கப்படுவதாக ரிவர்வ் வங்கி அறிவித்தது. ஆனால், வங்கிகள் இந்த சலுகை பெற வேண்டும் என்றால் லட்சக் கணக்கில் வட்டி கட்ட வேண்டி வரும் என்று வாடிக்கையாளர்களை மிரட்டி வருகின்றன.

nirmala-sitharaman

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நிதி நிறுவனங்களின் கடன் மீதான இ.எம்.ஐ தவணைகள் மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கையே இது.ஆனால் இந்த அறிவிப்பின் மகிழ்ச்சி இன்று பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் விடுத்துள்ள அறிவிப்பின் மூலம் திருடப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி ஓர் கணக்கை தனது இணைய தளத்தில் போட்டுள்ளது. வாகன கடன் ரூ 6 லட்சமாகவும், நிலுவை தவணைகள் 54 மாதங்கள் ஆகவும் இருப்பின் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக இறுதியில் ரூ 19000 கட்ட வேண்டி வரும். இது ஒன்றரை இ. எம்.ஐ தவணைகளுக்கு சமம்.
வீட்டுக் கடன் 30 லட்சமாகவும், நிலுவை ஆண்டுகள் 15 ஆகவும் இருக்கிற பட்சத்தில் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக 2.34 லட்சம் கட்ட வேண்டி வரும். இது 8 இ.எம்.ஐ களுக்கு சமம். இந்த கணக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல… தண்டனை என்ற அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

private-banks-8.jpg

கோவிட் 19 ஆல் நிலை குலைந்து, பரிதவித்து நிற்கிற சாதாரண, நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏதோ கைகளில் தருவது போல பாவனை செய்துவிட்டு அவர்களிடம் இருப்பதையும் (?) தட்டிப் பறிக்கிற குரூரத்தை அரங்கேற்றுவது என்ன நியாயம்? மக்கள் கேட்பது, அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்… 3 மாதம் தவணைகள் பிடிக்கப்படாவிட்டால் நிலுவைக் காலத்திலும் அதே இ.எம்.ஐ தொகையோடு 3 மாதங்கள் நீடிக்க வேண்டும் என்பதுதான்…
நிதி அமைச்ச்சரே… ரிசர்வ் வங்கி கவர்னரே… கந்து வட்டிக் காரர்களை விட மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்… உங்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்த்தது அவ்வளவு பெரிய குற்றமா? அதற்கு தண்டமா? மக்களுக்கு கூடுதல் சுமை இன்றி உங்கள் முடிவை அமலாக்குங்கள்” என்று கூறியுள்ளார்.