கந்தசஷ்டி விரதத்தை மிஸ் பண்ணவங்க நாளைக்கு மட்டுமாவது விரதம் இருங்க!

 

கந்தசஷ்டி விரதத்தை மிஸ் பண்ணவங்க நாளைக்கு மட்டுமாவது விரதம் இருங்க!

ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்கு பிறகு, அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இந்த நாட்களில் விரதம் இருப்பதை கந்தசஷ்டி விரதம் என்கிறோம். இந்த வருடம் கந்தசஷ்டி விரதம்  28ம் தேதி திங்கட்கிழமை துவங்கி ஆறாவது தினமான நாளையுடன் (நவம்பர் 2) சனிக்கிழமை சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் விரதம் இருப்பதை மறந்து விட்டவர்கள் நாளைய தினம் மட்டுமாவது விரதம் இருந்து கந்தனை வழிபட்டு அருள் பெறுங்கள். 

ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்கு பிறகு, அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இந்த நாட்களில் விரதம் இருப்பதை கந்தசஷ்டி விரதம் என்கிறோம். இந்த வருடம் கந்தசஷ்டி விரதம்  28ம் தேதி திங்கட்கிழமை துவங்கி ஆறாவது தினமான நாளையுடன் (நவம்பர் 2) சனிக்கிழமை சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் விரதம் இருப்பதை மறந்து விட்டவர்கள் நாளைய தினம் மட்டுமாவது விரதம் இருந்து கந்தனை வழிபட்டு அருள் பெறுங்கள். 
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழியே திரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். அத்தகைய ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது கந்தசஷ்டி விரதமாகும்.

kandhashasti

கந்தசஷ்டி விரதம் இருக்கும் முறை :
விரதம் இருப்பதற்கு முதல் நாளான இன்று மாலையே வீட்டைச் சுத்தப்படுத்தி வீடு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். நாளைய தினம் அதிகாலையில் எழுந்து, பிரம்ம முகூர்த்த வேளையில் நீராட வேண்டும்.  காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு வீட்டிலுள்ள சுவாமிக்கு பூக்களை வைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும். அருகில் இருக்கும் முருகன் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளும் நாளில், முருகனை மனதில் நினைத்துக்கொண்டு கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் போன்ற கவச நூல்களை பாட வேண்டும். திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தசஷ்டி கவசம் மற்றும் கந்தரது அனுபூதி போன்ற நூல்களையும் படிக்கலாம். இந்த விரதத்தை அன்ன ஆதாரமின்றி கடைபிடிக்க முடியாதவர்கள் பகலில் பழம், பால் போன்றவைகளை உட்கொள்ளலாம். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். 

kandhshasti

காலை முதல் மாலை வரை குறைந்த அளவு பானம் மட்டும் அருந்தி மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம் அல்லது இரவு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோவில்களில் தங்கி விரதமிருப்பது கூடுதல் நன்மையைத் தரும். கோவில்களில் தங்கி விரதம் இருக்க முடியாதவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதம் இருக்கலாம்.  நாளைய தினம் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சியை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். கந்தசஷ்டி விரதத்தை அவரவர் உடல் நிலைகளுக்கு தகுந்தவாறு அனுசரிக்க வேண்டும். முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.