‘கத்தி’: 4 ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

 

‘கத்தி’: 4 ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

தளபதி விஜய் நடித்த ‘கத்தி’ படம் ரிலீசாகி 4 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை: தளபதி விஜய் நடித்த ‘கத்தி’ படம் ரிலீசாகி 4 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் சமூக பிரச்னையை முன்வைத்து உருவானது. கடந்த 2014ம் ஆண்டு அக்.22ம் தேதி ரிலீசான ‘கத்தி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

இப்படம் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. விவசாய பிரச்னையை வெளிப்படையாக பேசிய இப்படடம் சில அரசியல் ரீதியான சர்ச்சைகளில் சிக்கியது. தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை, வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள், கார்ப்ரேட்களின் களவானி தனத்தையும் பேசிய இப்படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்‌ஷனில் அசத்தியிருப்பார்.

vijay

மிகப்பெரிய வெற்றிப்படமான ‘கத்தி’ திரைப்படம் ரிலீசாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆனதையொட்டி, தளபதி ரசிகர்கள் #4YearsofBlockbusterKaththi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தெலுங்கில் ரீமேக்கான ‘கத்தி’ படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்திருந்தார். இது அவரது 150 வது திரைப்படமும், சிரஞ்சீவியின் கம்பேக் படமும் என்பது குறிப்பிடத்தக்கது.