கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம் ! 18 மாதத்தில் தந்தையை இழந்து மண் அள்ளிப் போட்ட குழந்தை !

 

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம் ! 18 மாதத்தில் தந்தையை இழந்து மண் அள்ளிப் போட்ட குழந்தை !

பிரிட்டனில் தந்தையின் சவப்பெட்டி மீது கைக்குழந்தை மண் அள்ளிப்போட்ட சோகமான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரிட்டனின் சவுத் யார்க்ஸ் அருகே செபில்டு பகுதியை சேர்ந்த ஓலிவா சமுக வலைதளத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதை சமூக வலைதளங்களில் பார்த்த பலர் கண்ணீர் விட்டுள்ளனர்.

ஓலிவாக்கு லெவிஸ் என்ற கணவரும், கார்டர் பேக்‌ஷா என்ற குழந்தையும் உள்ளனர். கணவர் லெவிஸ் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்பு உடையவர் என கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் வீட்டிற்கு வந்த மர்மக் கும்பல் ஒன்று பழிக்குப் பழியாக லெவிசை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது. இதை பார்த்த ஓலிவா அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் அடக்கம் செய்ய தேவாலயம் அருகே உள்ள கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு

லெவிசை சவப்பெட்டியில் வைத்து மூடிவிட்டு பின்னர் குழியில் வைக்கப்படுவதை என்னவென்று தெரியாமல் பார்க்கிறது அந்தக் குழந்தை. பின்னர் மற்றவர்களைப் போலவே மண்ணை வாரி தந்தையின் சவப்பெட்டி மேல் போடுகிறது.

பிரிட்டன் தந்தை மீது மண் போடும் குழந்தை

அந்தக் குழந்தை தந்தையின் மீது மண் அள்ளிப் போடும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீசார் தெரிவித்தபோது கடந்த 16 மாதங்களில் 10 பேர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டதாகவும், லெவிசை கொலை செய்தவர்கள் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தந்தை இறந்தது தெரியாத குழந்தை அவர் எதிர்நோக்கி தினமும் வாசலில் காத்திருப்பதாக ஓலிவா வேதனையுடன் தெரிவித்துள்ளார். தந்தை இனிமேல் வரமாட்டார் என்பதை எப்படி குழந்தைக்கு சொல்வேன் என தெரிவிக்கிறார். மேலும் கத்தி எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் மரணம் என்பதை உணர்த்தவே இந்த புகைப்படம் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தள்ளார் ஒலிவா