கதாபாத்திரம் மட்டும் தான் ‘பீடை’… உண்மையில் அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! மனம் நெகிழ்ந்த நகைச்சுவை நடிகர் 

 

கதாபாத்திரம் மட்டும் தான் ‘பீடை’… உண்மையில் அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! மனம் நெகிழ்ந்த நகைச்சுவை நடிகர் 

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. ஒரு காரை மையமாக  வைத்து அதைச் சுற்றி நடக்கும் இரு காதல் ஜோடிகளின் காதல் கதை தான் இந்த படம். இந்த படத்தில் வரும் வயதான தம்பதிகளின் அன்பு அனைவரையும் நெகிழச் செய்தது

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. ஒரு காரை மையமாக  வைத்து அதைச் சுற்றி நடக்கும் இரு காதல் ஜோடிகளின் காதல் கதை தான் இந்த படம். இந்த படத்தில் வரும் வயதான தம்பதிகளின் அன்பு அனைவரையும் நெகிழச் செய்தது. எஸ்.யூ.அருண்குமார் தன் முதல் படத்திலேயே மிகவும் எதார்த்தமான ஒரு காதல் கதையை வழங்கியிருந்தார்.

pannaiyarum-padminiyum

இந்த படத்தில் ‘பீடை’ என்றொரு கதாபாத்திரம் படம் பார்த்தவர்கள் அனைவர் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கும். நகைச்சுவை நடிகர் பாலசரவணன் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய நகைசுவைக் காட்சிகள் இந்த படத்தில் மக்களை நன்றாக ரசிக்க வைத்தது. இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாலாசரவணன் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பதிவிட்டிருந்தார்.

peedai

அந்த பதிவில் “என் வாழ்நாளில் மிகமுக்கியமான படம்…படத்தில்தான் அவன் பீடை,ஆனால் நிஜவாழ்கையில் பீடை எனக்கு அள்ளி கொடுத்த ராசிக்காரன்,அவனால் எத்தனை வாய்ப்புகள்…நன்றி அன்பு நண்பா #SUஅருண்குமார்…சேது அண்ணே உங்ககூட நடிச்ச அந்த அன்பு தருணங்கள என்றும் என்னால் மறக்கமுடியாது ணே” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இதைப்  பார்த்த அனைவரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.