கதறி அழுத சரவணன்! ஆறுதல் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

 

கதறி அழுத சரவணன்! ஆறுதல் கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!

பிக் பாஸ் போட்டியாளர்களுள் ஒருவரான சரவணன் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேறினார்.

பிக் பாஸ் போட்டியாளர்களுள் ஒருவரான சரவணன் நேற்று  நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேறினார். கல்லூரி காலத்தில் பேருந்தில் செல்லும் போது, பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகச் சரவணன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்ட போதும், பிக் பாஸ் வீட்டில் அவர் வெளியேற்றப்பட்டார். 

நீண்ட நேரமாக சரவணன் வராததால் அதிர்ச்சியடைந்த ஹவுஸ் மேட்ஸ்ஸை லிவ்விங் ஏரியாவிற்கு அழைத்து பிக் பாஸ், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக’ அறிவித்தார். இதைக் கேட்டு சாண்டி, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் கதறி அழ ஆரம்பித்து விட்டனர். 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு  நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான பரணி பேட்டியளித்துள்ளார். அதில், ‘நான் சரவணன் வெளியேறியது தவறாக செய்தி பரப்பப்படுகிறதோ என்று நினைத்தேன். பின்னர் அவரிடம் போன் செய்து கேட்டேன். அவர் என்னப்பா எதுவும் கெட்ட பெயர் வந்துருச்சா என்று கேட்டு அழு ஆரம்பித்து விட்டார்’. 

தொடர்ந்து பேசிய பரணி, ‘அவர் இப்போது சேலத்தில் இருக்கிறார். அவரது மகனுக்கு காய்ச்சல் இருந்துள்ளது . அவர் வீட்டுக்குச் சென்றதும் அது சரியாகிவிட்டதாக’ கூறினார்.