கண் இமைக்கும் நொடியில் சாலையில் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்: அதிர்ச்சி தரும் வீடியோ!
மழை பெய்துகொண்டிருந்தபோது, மின்சார கம்பத்தை பிடித்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்: மழை பெய்துகொண்டிருந்தபோது, மின்சார கம்பத்தை பிடித்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பிரபு தர்ஷன் சொசைட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் காஜல். 20 வயதான இவர் கடந்த 29 ஆம் தேதி, கார்கில் சௌக் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது காஜல் தற்செயலாக அங்கிருந்த மின்சார கம்பத்தை பிடிக்க நொடி பொழுதில் மின்சாரம் தாக்கி மின் கம்பத்தைப் பிடித்தபடியே சரிந்து விழுந்தார்.
இதை கண்ட அப்பகுதியில் சிலர் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர். பின்பு காஜலின் வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காஜல் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Heartbreaking. A young girl electrocuted to death after touching a wet electric pole in rain soaked #Surat @IndiaAheadNews pic.twitter.com/c7vQ24OgyS
— Sourav Sanyal (@SSanyal) June 30, 2019
இச்சம்பவம் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது இந்த காட்சியானது வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.