கண்ணைக் கட்டிக் கொண்டு 35 கி.மீ சைக்கிள் பயணம்… சாதனை படைத்த 9 வயது சிறுவன் !

 

கண்ணைக் கட்டிக் கொண்டு  35 கி.மீ சைக்கிள் பயணம்… சாதனை படைத்த 9 வயது சிறுவன் !

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார்ப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் ஆசிவ்(9).

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார்ப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் ஆசிவ்(9). ஆசிவ் கண்ணைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதில் பயிற்சியும் மேற்கொண்டு வந்துள்ளார். அதற்கு அவரது பெற்றோரும் ஊக்கமளித்து வந்துள்ளனர். ஆசிவ் வீட்டிலேயே கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுவாராம். 

ttn

இந்நிலையில், இன்று பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து பேராவூரணி சாலையில் கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டே சுமார் 35 கி.மீ வரை சென்றுள்ளார். இந்த சாதனைக்கு 20 கி.மீ தூரம் வரையே இலக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிவ் 35 கி.மீ வரை பயணித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவரது சாதனைக்கு  அங்கீகாரமாக, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆசிவின் சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஆசிவுக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.