கண்ணைக் கட்டிக்கொண்டு பந்தை அடிக்கும் சச்சின்.. வைரலாகும் வீடியோ…

 

கண்ணைக் கட்டிக்கொண்டு பந்தை அடிக்கும் சச்சின்.. வைரலாகும் வீடியோ…

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின், கண்ணைக் கட்டிக்கொண்டு பந்தை அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.  இதனால் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் , மக்கள் அனைவரும் பெரும்பாலான நேரத்தை  சமூக வலைத்தளங்களிலேயே செலவிட்டு வருகின்றனர்.  பிரபலங்கள் பலரும் பாடல்களுக்கு டிக்டாக் செய்வது, தங்களது அன்றாட நடவடிக்கைகளைக் காணொளியாக வெளியிடுவது, சக நண்பர்களுக்கு  சவால் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

yuvaraj

அந்த வகையில்  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் யுவராஜ் பந்தைத் தொடர்ச்சியாக அடித்துக்கொண்டிருந்தார். அதன் மூலம் தான் இப்படித்தான் வீட்டிலிருந்து கொரோனாவுடன் போராடுவதாகவும், இந்தச் சவாலை சச்சின் டெண்டுல்கர், ரோகித் ஷர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிடவேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

sachin tendulkar

இந்நிலையில் அந்த சேலஞ்சை ஏற்ற சச்சின் தெண்டுல்கர்  பந்தை தொடர்ச்சியாக அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால், சச்சின் தனது இரு கண்களைக் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு யுவராஜ் கொடுத்த சவாலைச் செய்துள்ளார். மேலும் இந்தச் சவாலை எற்றுக்கொண்டு யுவராஜ் சிங்கும் இதுபோல் கண்ணைக் கட்டிக்கொண்டு பந்தை அடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். சச்சின் கண்ணைக் கட்டிக்கொண்டு பந்தை அடிக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது எப்படி சாத்தியம் என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on