கண்ணாடியை உணவாக சாப்பிட்டுவரும் வழக்கறிஞர்!
Sep 14, 2019, 12:03 IST1568442785000
மத்தியப் பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் கண்ணாடி துண்டுகளை உணவாக உட்கொண்டு வருகிறார். திந்தோரி என்ற பகுதியைச் சேர்ந்த தயாராம் சாஹு என்ற அந்த வழக்கறிஞர், கடந்த 40 வருடங்களாக கண்ணாடி துண்டுகளை உணவாக எடுத்துக் கொண்டுவருகிறார்.
இதனால் பற்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அவர், தற்போது கண்ணாடி துண்டுகளை உண்பதை வழக்கத்தை விட சற்று குறைத்துள்ளதாக தெரிவித்தார். உடலுக்கு தீங்கு என்று பலர் கூறியதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தயாராம் சாஹு தெரிவித்துள்ளார்.