கண்ட நேரத்தில் அழைப்பார் -கடிகாரத்தில் ‘கில்மா’ படம் காமிப்பார் -டான்ஸ் மாஸ்டரின் தகாத செயல் -புண்ணான பெண் புகார்.. 

 

கண்ட நேரத்தில் அழைப்பார் -கடிகாரத்தில் ‘கில்மா’ படம் காமிப்பார் -டான்ஸ் மாஸ்டரின் தகாத செயல் -புண்ணான பெண் புகார்.. 

ஒரு பெண்  நடனக் கலைஞர்,டான்ஸ் மாஸ்டர்  கணேஷ் ஆச்சார்யா தனது கைக்கடிகாரத்தில்  ஆபாசபடம் காமிப்பதாக   அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.கணேஷ் ஆச்சார்யாவைத் தவிர, புகார்தாரர் ஜெயஸ்ரீ கெல்கர் மற்றும் ப்ரீத்தி லாட் என்ற இரண்டு நடன பெண்கள் மீதும் அவர்   புகார் அளித்துள்ளார் 

ஒரு பெண்  நடனக் கலைஞர்,டான்ஸ் மாஸ்டர்  கணேஷ் ஆச்சார்யா தனது கைக்கடிகாரத்தில் ஆபாசபடம் காமிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். கணேஷ் ஆச்சார்யாவைத் தவிர, புகார்தாரர் ஜெயஸ்ரீ கெல்கர் மற்றும் ப்ரீத்தி லாட் என்ற இரண்டு நடன பெண்கள் மீதும் அவர் புகார் அளித்துள்ளார் 
.
மும்பை: பாலிவுட் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் செல்லும் போதெல்லாம் தன்னை ஆபாச வீடியோக்களை பார்க்க வைப்பதாக   33 வயதான பெண் ஒருவர் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு (என்.சி.டபிள்யூ) கடிதம் எழுதியுள்ளார்.

ganesh-acharya-02

மும்பையின் அந்தேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தின் (ஐஎஃப்டிசிஏ) விழாவின் போது கணேஷ் ஆச்சார்யாவும், ஜெயஸ்ரீ கெல்கர் மற்றும் ப்ரீத்தி லாட் என்ற இரண்டு பெண்களும் தன்னைத் தாக்கியதாகவும் அந்த  உதவி நடன இயக்குனரான பெண் புகார் அளித்துள்ளார்..
அம்போலி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், கணேஷ் ஆச்சார்யா திரைத்துறையில் பணியாற்றுவதற்காக தன்னிடம் கமிஷன் கோருவதாகவும்  IFTCA இன் உறுப்பினராகவும் உள்ள அப்பெண் அவர் மீது  குற்றம் சாட்டினார்.

iftca

IFTCA இன் பொதுச் செயலாளராகஇருக்கும் கணேஷ் ஆச்சார்யா, அந்தேரியில் உள்ள அலுவலகத்தில் புகார்தாரரை அடிக்கடி அழைத்து இப்படி பலான படம் காமிப்பதாக , ஒரு போலீஸ் அதிகாரி அந்த புகாரை மேற்கோள் காட்டி கூறினார்.
ஜனவரி 26ம் தேதி அன்று, அந்த பெண் IFTCA அலுவலகத்துக்கு போனபோது,  ஆச்சார்யா அவரை பார்த்து  கூச்சலிட்டதாகவும்,பிறகு  அவர் “இடைநீக்கம் செய்யப்படுவதாக” அறிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் ஆச்சார்யா தனது குழு உறுப்பினரான ஜெயஸ்ரீ கெல்கரை தன்னை அறையுமாறு  சொன்னதால் 
“கேல்கர் மற்றும் ப்ரீத்தி லாட்” ஆகியோர் பொதுஇடத்தில் என்னைத் தாக்கினர் அது சி.சி.டி.வி.யில் படம்பிடிக்கப்பட்டுள்ளது, என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் குற்றத்தை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .