கண்ட இடங்களில் பேனர் வைக்கக்கூடாது என்பது சினிமாவுக்கும் பொருந்தும்: பிரபல நடிகர் ட்வீட்!

 

கண்ட இடங்களில் பேனர் வைக்கக்கூடாது என்பது சினிமாவுக்கும் பொருந்தும்: பிரபல நடிகர் ட்வீட்!

கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்

சென்னை: கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சாமானிய மக்கள் முதல் நீதிமன்றம் வரை இந்த பேனர் கலாச்சாரத்தைக்  கடுமையாகச் சாடி வருகின்றனர். 

suba

இதையடுத்து  திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள்  இரண்டும் இனி கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 

இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘எங்கு பார்த்தாலும் போஸ்டர் ஒட்டுவதைக் காதல் சடுகுடு படத்தில் நான் ஏற்கெனவே கண்டித்துள்ளேன். சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு மிகவும் வருந்தத்தக்கது. துரதிர்ஷ்டவசமானது. கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்’  என்று பதிவிட்டுள்ளார்.