கண்டுபிடித்த கணவன்- ரெண்டு லட்சம் கொடுத்த மனைவி -பெண்டு கழட்டிய காதலன்.

 

கண்டுபிடித்த கணவன்- ரெண்டு லட்சம் கொடுத்த மனைவி -பெண்டு கழட்டிய காதலன்.

தன்னுடைய கள்ள காதலை கண்டுபிடித்த கணவனை ஒரு மனைவி காதலனிடம் ரெண்டு லட்சம் கொடுத்து கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.

கண்டுபிடித்த கணவன்- ரெண்டு லட்சம் கொடுத்த மனைவி -பெண்டு கழட்டிய காதலன்.

மகாராஷ்டிராவின் பால்கரில் வசிக்கும் 35 வயதான ஆட்டோ  ஓட்டுநரான புண்டலிக் பாட்டீல் என்பவர் தனது மனைவி சினேகல் பாட்டீலுடன் வசித்து வந்தார் .அவர்  வசாயில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிகிறார் . அந்த பெண் போலீஸ் தன்னோடு கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும்  விகாஸ் பாஷ்டேவுடன் கள்ள உறவு கொண்டிருந்தார்.இந்த கள்ள உறவு விவகாரம் நாளடைவில் அவரின் கணவருக்கு தெரிய வந்தது .அதனால் அவர் தனது மனைவியை கண்டித்து ,இந்த கள்ள உறவை கை விடுமாறு கூறினார் .ஆனால் அந்த பெண் போலீசால் இந்த  கள்ள உறவை கை விட முடியவில்லை

அதனால் தன்னுடைய கணவனை கொல்ல முடிவு செய்தார் .அதனால் தனது கணவனைக் கொல்ல ஸ்னேஹால் தனது காதலன்  பாஷ்டேவிடம்  ரூ .2 லட்சம் கொடுத்தார் . அந்த பணத்தை வாங்கிய  பாஷ்தே, கூலிப்படையை சேர்ந்த ஸ்வப்னில் கோவரி, அவினாஷ் போயர் மற்றும் விஷால் பாட்டீல் ஆகிய மூன்று பேரிடம் அந்த பணத்தை கொடுத்து புண்டலிக்கை கொல்ல சொன்னார் .

பிப்ரவரி 17 அன்று, கூலிப்படையை சேர்ந்த அந்த மூவரும் புண்டலிக்கை அழைத்து கொண்டு அவரின்  ஆட்டோவில் தேக்கலேவுக்குப் பயணம் செய்தனர்.பிறகு ஒரு  வெறிச்சோடிய இடத்தைக் கண்டுபிடித்ததும், அவரின் தலையில் இரும்புக் கம்பிகளால் தாக்கினர். இந்த தாக்குதலில் புண்டலிக் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள், அந்த ஆட்டோ ரிக்‌ஷாவை  கவிழ்த்து விட்டு, அதை விபத்து போல் செட்டப் செய்தனர் .இந்த கொலை பற்றி போலீசார் துப்பு துலக்கி அவரை கொல்ல சொன்ன அவரின் மனைவி , காதலன் மற்றும் கூலிப்படையினர் ஆகியோரை  கைது செய்தார்கள்

கண்டுபிடித்த கணவன்- ரெண்டு லட்சம் கொடுத்த மனைவி -பெண்டு கழட்டிய காதலன்.