கண்காட்சி பார்க்கச் சென்ற பெண்ணை காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்பழித்த நால்வர் 

 

கண்காட்சி பார்க்கச் சென்ற பெண்ணை காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்பழித்த நால்வர் 

பாதிக்கப்பட்ட பெண் டெரிகான் வன நிலையத்தில் அளித்த புகாரின் படி, அந்த பெண் தனது கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் மாவாய் கிராமத்தில் ஒரு கண்காட்சியைக் காணச் சென்றிருக்கிறார். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வருகையில், சன்ஹெரா கிராமத்திற்கு அருகில்  நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்

 

பிப்ரவரி 17 ஆம் தேதி கபிர்தாம் மாவட்டத்தின் தாரேகான் காட்டில், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் டெரிகான் வன நிலையத்தில் அளித்த புகாரின் படி, அந்த பெண் தனது கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் மாவாய் கிராமத்தில் ஒரு கண்காட்சியைக் காணச் சென்றிருக்கிறார். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வருகையில், சன்ஹெரா கிராமத்திற்கு அருகில்  நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அந்த பெண்ணிடம் சென்று “உங்கள் ஊருக்குத் தான் நாங்களும் போகிறோம், உங்களை உங்கள் ஊரில் இறக்கி விடுகிறோம் “ என்று கூறி பைக்கில் ஏற்றியுள்ளனர். 

பின் கிராமத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, வண்டியை காட்டிற்குள் விட்டார்கள், அந்த நால்வரில் கேசாடா கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யா பைகா என்பவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நால்வரில் ஒருவர் என  அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் 22 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள், முக்கிய குற்றவாளிகளான ஆதித்யா, மனாஹரன், ராஜாராம் மற்றும் போரம்தேவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டனர்.