கண்காட்சிக்கு போன சிறுமிகளை மருத்துவமனைக்கு அனுப்பினர் -குடி வெறியில் குதறிய குடிகாரர்கள்   

 

கண்காட்சிக்கு போன சிறுமிகளை மருத்துவமனைக்கு அனுப்பினர் -குடி வெறியில் குதறிய குடிகாரர்கள்   

ராஞ்சி: ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் நான்கு பேர் கொண்ட குடிகார கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ராஞ்சி: ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் நான்கு பேர் கொண்ட குடிகார கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

5-8 வகுப்புகளில் படிக்கும் சிறுமிகள் ரங்ராரி கண்காட்சியைக் பார்த்துவிட்டு, புதன்கிழமை இரவு அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு குடிகார கும்பல்  இரண்டு சிறுமிகளைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தது. உடன் வந்த மற்ற சிறுமிகள்  தப்பி ஓடி புதர்களில் ஒளிந்துகொண்டு கற்பழிப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
வியாழக்கிழமை காலை தங்கள் வீட்டை அடைந்த பின்னர், சிறுமிகள் தங்கள் குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர்.
பின்னர் பொலிசார் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர்.
குந்தி மாவட்டத்தின் கலா மாட்டி தொகுதியின் கீழ் அமைந்துள்ள குடி பஞ்சாயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அனைத்து சிறுமிகளின் முகத்திலும் கீறல்கள் இருந்தன. இதுபற்றி  காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது