கணவர் கொலை மிரட்டல் விடுகிறார்: நாகினி சீரியல் நடிகை பரபரப்பு புகார்!

 

கணவர் கொலை மிரட்டல் விடுகிறார்: நாகினி சீரியல் நடிகை பரபரப்பு புகார்!

நடிகை அர்சு கோவித்ரிகர் தனது கணவர் குடித்துவிட்டு கொலை மிரட்டல் விடுகிறார் என காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

மும்பை: நடிகை அர்சு கோவித்ரிகர் தனது கணவர் குடித்துவிட்டு கொலை மிரட்டல் விடுகிறார் என காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

நாகினி உள்ளிட்ட இந்தி தொடர்களில் நடித்து வருபவர் அர்சு கோவித்ரிகர். இவருக்குக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த் சபர்வால் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

nagini

 

சித்தார்த் திருமணமானது முதல் தன்னை அவ்வப்போது குடித்துவிட்டு அடிக்கடி அடித்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் 15ம் தேதி குடிப்பிரச்சனை தொடர்பாக நான் சித்தார்த்துடன் பேசினேன். 

nagini

அது வாக்குவாதமாக மாறி என்னை தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் சென்று மோசமாக அடித்தார் என்று அர்சு கோவித்ரிகர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து சித்தார்த் தன்னை கொடுமைப்படுத்தியதுடன் மட்டும் இல்லாமல் தன் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கான சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் ஓடைப்படைத்துள்ளதாக கூறியுள்ளார்.