‘கணவரை 3 முறை கட்டையால் அடித்து கொன்ற மனைவி…’ ஆம்புலன்ஸுக்கு போன் செய்ததால் போலீசில் சிக்கினார்!

 

‘கணவரை 3 முறை கட்டையால் அடித்து கொன்ற மனைவி…’ ஆம்புலன்ஸுக்கு போன் செய்ததால் போலீசில் சிக்கினார்!

ஆனால்  காலை வரை எழுந்திருக்கவில்லை. அதனால் ஆம்புலன்ஸுக்கு  போன் செய்தேன்.அவர்கள் போலீசில் கூறிவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். 55 வயதான ஐயப்பன் மரத்தச்சு  வேலையை செய்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். 

ttn

இந்நிலையில் நேற்று காலை 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த கிருஷ்ணவேணி, என் கணவருக்கு தவறி விழுந்து  தலையில் அடிபட்டுவிட்டது என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஐயப்பன்  இறந்ததை உறுதிசெய்த பின்பு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அப்போது மனைவி கிருஷ்ணவேணி என் கணவரை நேற்று இரவு நான் பார்க்கவில்லை. காலையில் பாரத்தால்  இறந்து கிடக்கிறார் என்று கூறி நாடகம் ஆடியுள்ளார். கிருஷ்ணவேணி செய்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தன் கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். 

ttn

இதுகுறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் காதலித்து வீட்டை விட்டுப்போய் திருமணம் செய்துகொண்டாள். அப்போதிலிருந்து என் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்த என்னிடம் தகராறு செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு என் கணவர் வழக்கம் போல குடித்துவிட்டு வந்து என்னை அடித்தார். என்னால் வலி பொறுக்கமுடியவில்லை. இதனால் அங்கு கிடந்த விறகு கட்டையை கொண்டு அவர் தலையில் மூன்று முறை அடித்தேன்.அவர் மயங்கி விழுந்தார். நானும் போதையில் கிடக்கிறார் என்று நினைத்தேன். ஆனால்  காலை வரை எழுந்திருக்கவில்லை. அதனால் ஆம்புலன்ஸுக்கு  போன் செய்தேன்.அவர்கள் போலீசில் கூறிவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார். 

ttn

இதை தொடர்ந்து கிருஷ்ணவேணி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.