கணவரை காதலனுடன் இணைந்து கொலை செய்த மனைவி ஒரு வருடம் கழித்து சிக்கினார்

 

கணவரை காதலனுடன் இணைந்து கொலை செய்த மனைவி ஒரு வருடம் கழித்து சிக்கினார்

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் அவரது காதலனை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் அவரது காதலனை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

சுகிதா (30) என்பவர் பெங்களூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் ஒன்றில் பனி புரிந்து வருகிறார். இவருக்கும் உமாசங்கர் (35) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. சுகிதா திருமணத்திற்கு பின்பு தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீனிவாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

சென்ற வருடம் பிப்ரவரி 25 – ஆம் தேதி சுகிதா மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் உறவு குறித்து உமாசங்கருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சுகிதா தன் காதலருடன் சேர்ந்து தன் கணவரை கொலை செய்து விட்டு குடி போதை அதிகமாகி அவர் இறந்து விட்டதாக நாடகமாடி இருக்கிறார்.

ஆனால், உமா சங்கரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மாமா காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், உமாசங்கரின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் உமாசங்கர் மது அதிகமானதால் இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து கொலையாளிகளான சுகிதா மற்றும் அவரது காதலர் ஸ்ரீநிவாஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உமா சங்கரின் மறைவுக்கு பின் காதல் ஜோடிகள் இருவரும் ஓடி ஒளியாமல், ஸ்ரீனிவாசின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில், கையும் களவுமாக மாட்டிக் கொண்டதால் வேறு வழியின்றி கணவரை கொன்றதாக சுகிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

உமா சங்கர் சுகிதா தம்பதியருக்கு 13 வயதில் மகள் மற்றும் 11 வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

.