கணவருக்கு மயக்கமருந்து கொடுத்து விட்டு காதலருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்: குழந்தையுடன் நிர்க்கதியாக நின்ற கணவர்!?
கணவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு பெண் ஒருவர் காதலுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: கணவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு பெண் ஒருவர் காதலுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். சொந்த ஊரிலேயே ஹோட்டல் நடத்தி வரும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.
பி.சி.ஏ படித்துள்ள சரண்யா கணவர் கனகராஜிடம் தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட கனகராஜ் அவரை கல்லூரியில் சேர்த்து விட்டுள்ளார். இப்படியே சில மாதங்கள் சென்ற நிலையில், சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. இதனால் சரண்யாவின் செல்போனை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பார்க்க அதில் அவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளது.
இதுகுறித்து சரண்யாவிடம் விசாரித்தபோது, அந்த இளைஞரைச் சிறு வயதிலிருந்தே காதலிப்பதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலால் உங்களைத் திருமணம் செய்துகொள்ள நேரிட்டது. இனிமேல் இப்படி தப்பு நடக்காது என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.இதையடுத்து சிலநாட்களுக்கு முன்பு கணவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த சரண்யா, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதை தொடர்ந்து, கனகராஜ் மனைவியைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து காதலருடன் துறையூரிலிருந்த சரண்யாவை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது ‘எனக்கு கணவரும், குழந்தையும் வேண்டாம், காதலன் செல்வம் தான் வேண்டும் என்று சரண்யா அடம்பிடித்தார். இதனால் வேறு வழியின்றி, போலீசாரும் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
குழந்தையை சரண்யாவிடம் கொடுத்துவிடு. உனக்கு வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கனகராஜின் பெற்றோர் கூறியதை ஏற்க மறுத்த அவர், என் குழந்தையை நானே வளர்த்துக் கொள்கிறேன் என்று கூறி வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.