கணவரிடம் போனில் பேசிக் கொண்டே 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்த மனைவி !

 

கணவரிடம் போனில் பேசிக் கொண்டே 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்த மனைவி !

கணவர் வீட்டுக்கு வராத சமயத்தில் செல்வி அவருடன் போனில் குழந்தை நடக்கத் தொடங்குவது பற்றியெல்லாம் சொல்வாராம். 

புதுச்சேரி மாவட்டம் ஜீவானந்தபுரம் பகுதியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவரது மகள் செல்வி. இவருக்குக் கடந்த 2017 ஆண்டு  பெரம்பலூரைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ttn

குழந்தை பிறந்ததிலிருந்து செல்வி அவரது அம்மா வீட்டிலேயே இருந்துள்ளார். அவ்வப்போது சரவணன் வந்து குழந்தையையும் மனைவியையும் வந்து பார்த்து விட்டு செல்வாராம். கணவர் வீட்டுக்கு வராத சமயத்தில் செல்வி அவருடன் போனில் குழந்தை நடக்கத் தொடங்குவது பற்றியெல்லாம் சொல்வாராம். 

tttn

அதே போல நேற்று 2-வது மாடியில் நின்று போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். போன் பேசிக் கொண்டே மாடியில் உயரம் குறைவாக இருந்த சுவரின் அருகே வந்துள்ளார். அப்போது திடீரென தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.